About Our Church - St. Antony's Church Tirunelveli
புனித அந்தோணியார் ஆலயம், கோரிப்பள்ளம்
தூய சவேரியார் பேராலயப் பங்கு,
பாளையங்கோட்டை .
இறையன்புடையீர் !!
கோரிப்பள்ளம் புனித அந்தோணியார் ஆலயம், சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்னர் மண் சுவர் மற்றும் ஓலை கூரையுடன் ஆரம்பிக்கப்பட்டு; பின்னர் செங்கல் சுவர் ஓட்டுக் கூரையாக மாறியது. தற்போது நீங்கள் காணும் இந்த ஆலயம் 2001ல் செங்கல் சுவர் கான்கிரீட் கூரையாக மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் 2006 ல் புதுபொலிவுடன் மாதா கெபியுடன் மணிக்கூண்டும், நியான் சிலுவையும் அழகுபெற அமைக்கப்பட்டது.
இவ்வாலயத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணிக்கு ஜெபமாலையும் அதைத் தொடர்ந்து 7:00 மணிக்கு திருபலி நடைபெறும் மற்றும் அணைத்து நாட்களிலும் மாலை 7:00 மணிக்கு இரவு ஜெபம் சிறப்பாக நடைபெறும்
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை நன்கு பயிற்சி பெற்ற மறைக்கல்வி ஆசிரியர்களால் மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறும் மற்றும் ஒவ்வொருவாரமும் வெள்ளிக்கிழமையில் மதியம் 2:00 மணி முதல் 3:00 மணி வரை நற்கருணை ஆராதனை ஜெப வழிபாடு நடைபெறும்
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 7:00 மணிக்கு திருவிழா கொடியேற்றி அதைத்தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். முக்கிய நிகழ்வாக 9வது நாள் திருவிழா அன்று புனித அந்தோணியாரின் திருசுருபசப்ரபவனி நடைபெறும்.
கோரிப்பள்ளம் புனித அந்தோணியார் திருத்தளதிற்கு நம்பிக்கையுடன் வருவோருக்கு உடல் நோய் நீங்கி நலம் பெற்றும், குழந்தை பாக்கியம் பெற்றும், தேர்வில் வெற்றி, வேலை வாய்ப்பும், நல்ல வாழ்க்கை அமையப்பெற்றும் வருகின்றனர்.
திரு. புஷ்பராஜ் அவர்களின் சீரிய முயற்சியால் இத்திருத்தலம் மென்மேலும் வளர இறைமகன் இயேசுவின் அருளால் அவரையும் அவர் குடும்பத்தையும் அசிர்வதிப்பாராக..
நன்றி !!!
வணக்கம் !!!
S. Anto Navis
S/O A.Siluvai Mani,
Koripalllam,
Palayamkottai.
Tirunelveli.
627002
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக